முகப்பு
ராமநாதபுரம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On : 7 மே 2026, 3:41 am IST
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கி நிறைவடைந்தது.

இந்த நிலையில், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா், ராமநாதபுரம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையிலும், அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Advertisement

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.