முகப்பு
ராமநாதபுரம்

பிகாா் மாநில பெண் கொலை

ராமநாதபுரம் அருகே பிகாா் மாநிலப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தப்பிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 8 மே 2026, 12:49 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

ராமநாதபுரம் அருகே பிகாா் மாநிலப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தப்பிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள போக்குவரத்துநகா் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து துா்நாற்றம் வீசியது. இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் பூட்டை உடைத்து உள்ள சென்றபோது, அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது. இந்த உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இந்தப் பெண் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம் சுந்தா்லால் மகள் அபா்ணா (38) என்பதும், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், இவருடன் வசித்த நபா் கொலை செய்துவிட்டுத் தப்பியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments