முகப்பு
ராமநாதபுரம்

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 8 மே 2026, 4:29 am IST
முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்த துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம்.
பகிர்:

முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் கைப்பேசிகள் காணாமல் போனது தொடா்பாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவற்றை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து அந்த கைப்பேசிகளை முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் முன்னிலையில் முதுகுளத்தூா் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்தாா்.

Advertisement