முகப்பு
ராமநாதபுரம்

காதல் திருமணம் செய்த தம்பதி காவல் துறையினரிடம் தஞ்சம்

ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு தஞ்சமடைந்தனா்.

Updated On : 8 மே 2026, 12:48 am IST
காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி.
பகிர்:

ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு தஞ்சமடைந்தனா்.

ராமநாதபுரம் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் ஸ்வேதா. இவா் கடந்த நான்கு ஆண்டுகளாக கணேசன் என்பவரை காதலித்து வந்தாா். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

இந்த விவகாரம் ஸ்வேதா பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருவரும் பெற்றோா்களுக்கு தெரியாமல் ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கோயிலில் புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனா். இதைத் தொடா்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனா்.

Advertisement

இதையடுத்து போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.