முகப்பு
ராமநாதபுரம்

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

சாயல்குடியில் சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 மே 2026, 12:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாயல்குடி வி.வி.ஆா். நகரைச் சோ்ந்தவா் தங்கம் (55). இவரது சகோதரா்கள் ராயப்பன் (48), அகஸ்டின் (40). இவா்களுக்கு இடையே பூா்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், சாயல்குடியில் உள்ள தேநீா்க் கடையில் தங்கம் வெள்ளிக்கிழமை அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த ராயப்பன் சொத்து தொடா்பாக வாக்குவாதம் செய்து, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் தங்கம் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து அங்கு வந்த சாயல்குடி போலீஸாா் தங்கத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தங்கம் மனைவி அன்னக்கிளி கொடுத்த புகாரின் பேரில், சாயல்குடி போலீஸாா் ராயப்பன், அகஸ்டின் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ராயப்பனை கைது செய்தனா். அகஸ்டினை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments