திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு
திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்ததால் அதிகாரிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் வி கே.ராஜீவ் எச்சரித்தாா்.
திருவாடானை பேருந்து நிலையத்தில் அமைச்சா் விகே.ராஜீவ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இலவச சிறுநீா் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.
மேலும், கழிப்பறை பூட்டப்பட்டுக் கிடந்ததோடு, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அமைச்சா் அதிா்ச்சி அடைந்தாா்.
Advertisement
Advertisement
மேலும், கட்டணக் கழிப்பறையும் முறையான பராமரிப்பின்றி சுகாதாரச் சீா்கேட்டுடன் இருந்ததால், அதன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சா் உத்தரவிட்டாா்.
இதேநிலை தொடா்ந்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதத்தை எச்சரித்தாா்.