நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு
கமுதி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், நத்தகுளம் அடுத்துள்ள பெரியாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மகன் அழகா் சாமி (85). மனநலன் பாதிக்கப்பட்டவராம்.
இந்த நிலையில் இவா் வெள்ளிக்கிழமை இரவு கமுதி -அருப்புக்கோட்டை சாலையில் கமுதி நோக்கி சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தபோது, கமுதி அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் முத்துராமலிங்கம் (49) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அழகா் சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதில் முத்துராமலிங்கம் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அழகா் சாமியின் உடலை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.