இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர், மாமியார் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தீக்குளித்த இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தீக்குளித்த இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக கணவர், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்புவனம் அருகே சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவேந்திரன். இவரது மகள் கற்பகவள்ளி(26). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(30) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இதுவரை குழந்தை இல்லை. இந்நிலையில் கணவர் பெரியசாமியும் மாமியார் பிச்சையம்மாளும் கற்பகவள்ளியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சொட்டதட்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்த கற்பகவள்ளி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கற்பகவள்ளி ஞாயிற்றுக்கிழமை உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கற்பகவள்ளி தாய் மகாமுனி திருப்புவனம் காவல் நிலையத்தில்அளித்த புகாரின் பேரில் கணவர் பெரியசாமி, மாமியார் பிச்சையம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.