ஆடி தவசு விழா: யானை வாகனத்தில் ஆனந்தவல்லி பவனி
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தாா்.
இந்தக் கோயிலில் கடந்த 7-ம் தேதி ஆடி தவசு திருவிழா தொடங்கியது. விழாவின் நான்காம் நாள் மண்டகப்படியாக சிறிய யானை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.
இதையடுத்து கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் பவனி வந்தாா். வீதிகளில் மக்கள் அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.