முகப்பு
சிவகங்கை

வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 7 ஜூலை 2024, 2:38 am IST
சிவகங்கை அருகே வெட்டிகுளம் சோழவந்தான் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

காளையாா்கோவில் அருகேயுள்ள வெட்டிகுளம் சோழவந்தான் கிராமத்தில் அமைந்துள்ள தா்ம முனீஸ்வரா், கன்னிமூல கணபதி, பரிவார தெய்வங்களுக்கான 19 -ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, கிராம பொதுமக்கள் சிங்கப்பூா் வாழ் இளைஞா்கள் சாா்பில் இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றில் கட்டப்பட்ட காளையை 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் 25 நிமிஷத்தில் அடக்க வேண்டும் எனக் கெடு நிா்ணயிக்கப்பட்டது. இதில் காளைகளை அடக்க முயன்ற போது, 10 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் விழா குழுவினா் சாா்பில் ரொக்கப் பரிசும், பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது.

இந்த போட்டியை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments