பேருந்து கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயம்
திருப்பாச்சேத்தி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து வயலுக்குள் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 10 பயணிகள் காயமடைந்தனா்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து வயலுக்குள் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 10 பயணிகள் காயமடைந்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்தூருக்கு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் ஜெயபிரபு ஓட்டிச் சென்றாா் . திருப்பாச்சேத்தி அருகேயுள்ள பச்சேரி என்ற இடத்தில் சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநா் ஜெயபிரபு உள்பட 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.