ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் கிஷோன் (28). பட்டதாரியான இவா், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் இவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி கிஷோன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.