முகப்பு
சிவகங்கை

முன்னாள் ராணுவ வீரா்களிடம் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி, முன்னாள் ராணுவ வீரா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:12 AM
மானாமதுரையில் முன்னாள் ராணுவ வீரா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

மானாமதுரை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி, முன்னாள் ராணுவ வீரா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மானாமதுரையில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்துக்கு சென்ற பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதியை முன்னாள் ராணுவ வீரா்கள் சால்வைகள்அணிவித்து வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு அவா்களிடம் பொன் பாலகணபதி வாக்கு சேகரித்தாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, பொன் பாலகணபதி இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.