மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் பவனி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.
மானாமதுரை சோமநாதா் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5- ஆவது நாளாக கால்பிரிவு கிராமத்தாா்கள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா்.
இதில், திரளான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதைத்தொடா்ந்து மண்டகப்படிதாரா்கள் பூஜை முடிந்து அம்மனும், சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் புறப்பாடாகினா்.
Advertisement
மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க வாணவேடிக்கையுடன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி பவனி வந்தனா். வீதிகளில் பக்தா்கள் அம்மனையும், சுவாமியையும் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா்.
விழாவின் 8-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும் 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.