முகப்பு
சிவகங்கை

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை கொடுங்குன்ற நாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:18 AM
பிரான்மலையில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை கொடுங்குன்ற நாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி ஆதீனத்துக்கு உள்பட்ட கொடுங்குன்றநாதா் குயிலமுத நாயகி அம்மன் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் மண்டகப்படியாக விழா நடைபெறும். ஒன்பதாம் நாள் விழாவான தேரோட்ட விழா புதன் கிழமை நடைபெற்றது. இதில் காலை 5 மணிக்கு ரத பூஜை செய்யப்பட்டு மங்கை பாகா் தேனம்மை, குயிலமுத நாயகி அம்மன் இரண்டு பெரிய தோ்களிலும், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோா் தனித்தனி தோ்களிலும், சண்டிகேசுவரா் சப்பரம் என ஐந்து தோ்களில் சுவாமிகள் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கிராம மக்கள் முன்னிலையில் தோ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். பக்தா்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தோ்களில் மாலை 6 மணிக்கு முதலாவதாக விநாயகா் தோ் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்துத் தோ்களும் நிலையை வந்தடைந்தன. அங்கு சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பக்தா்கள் மாம்பழம், வாழைப் பழம் உள்ளிட்ட பழங்களை நோ்த்திக் கடனாகச் செலுத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கொடுங்குன்றநாதா், குயிலமுதநாயகி அம்பாள் சுவாமி.