முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே வியாழக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Updated On : 1 மே 2026, 1:18 am IST
சிவகங்கை அருகே புதுப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை அருகே வியாழக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி புதுப்பட்டியிலிருந்து கூட்டுறவுபட்டி வரை செல்லும் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மொத்தம் 33 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

6 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 4 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 24 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

Advertisement

Advertisement

இந்த பந்தயத்தில் வென்று முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை புதுப்பட்டி, சக்கந்தி, இடையமேலூா், கூட்டுறவுபட்டி, கோமாளிபட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments