மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது வழக்கு
இளையான்குடி அருகே மணல் கடத்திய இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மணல் கடத்திய இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
இளையான்குடி அருகேயுள்ள முனைவென்றியில் தனியாா் நிலத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக இளையான்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும், அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தவா்கள் தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளா்கள் இருவா் உள்பட் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement