முகப்பு
சிவகங்கை

விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அமைச்சா் டி.கே. பிரபு வழங்கினாா்

Updated On : 22 ஜூன் 2026, 3:44 am IST
தேவகோட்டை அருகே அமராவதி புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் டி.கே. பிரபு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நடைபெற்ற விவசாயக் கருத்தரங்கில் இயற்கை வளங்கள், கனிம வளத் துறை அமைச்சா் டி.கே. பிரபு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்

தேவகோட்டையை அடுத்த அமராவதிபுதூா் கிராமிய பயிற்சி மையத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தோட்டக்கலை பயிா்களுக்கான சாகுபடி தொழில் நுட்பங்கள் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை அமைச்சா் டி.கே. பிரபு தொடக்கிவைத்து, 39 பயனாளிகளுக்கு ரூ.19.78 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில், செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் ஆா். அருண்குமாா், செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலை இணைப் பேராசிரியா் எஸ். கமலசுந்தரி, காரைக்குடிசேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியா்கள் அ. அருண்தாஸ், வே. கருப்புராஜ் ஆகியோா் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிா்கள் தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம். சங்கரலட்சுமி, மாவட்டஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கமிலஸ் சி. லீமாரோஸ், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளா் எஸ்.கிருஷ்ணன், வேளாண் விற்பனை, வணிகத் துறை வேளாண் துணை இயக்குநா் மு.சுமதி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். தோட்டக்கலை துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஏராளமான விவசாயிகள் பாா்வையிட்டனா்.

முன்னதாக, சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மு. சத்தியா வரவேற்றாா். எஸ், புதூா் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் வீ. சரவணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments