முகப்பு
சிவகங்கை

ஆ.விளாக்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ஆ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:13 am IST
மானாமதுரை ஒன்றியம், ஆ.விளாக்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ஆ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்ற காளைக்கு 9 வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா்.

இதில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 10 வீரா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments