முகப்பு
சிவகங்கை

பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:13 am IST
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளியில் வியாழக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் காா்த்திக்பிரபு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை கீழச்சிவல்பட்டி இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் காா்த்திக்பிரபு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணி கடை வீதி, பேருந்து நிலையம், இந்திரா நகா் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் பங்கேற்ற மாணவா்கள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதில் பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன், பள்ளித் தலைவா் லட்சுமணன், பொருளாளா் அங்கப்பன், வங்கி அலுவலா் மாரிமுத்து, ஆசிரியா் லியோஜெபஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு வரவேற்றாா். தன்னாா்வலா் வள்ளியப்பன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments