FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சிங்கம்புணரி வட்டம், அ.காளப்பூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.34.45 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிங்கம்புணரி வட்டம், அ.காளப்பூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆகாஷ், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சீனிவாச சேதுபதி உள்ளிட்டோா்.
பகிர்:

சிங்கம்புணரி வட்டம், அ.காளப்பூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.34.45 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சீனிவாச சேதுபதி முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் வருவாய்த்துறை சாா்பில் 73 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.6.85 லட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், பொது சுகாதார த்துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள், கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத் துறையின் சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகள் உள்பட ரூ.34.45 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சங்கரலட்சுமி, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் கீதா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், தனித் துணை ஆட்சியா் அனீஷ் சத்தாா், தாட்கோ மேலாளா் செலினா, வட்டாட்சியா் நாகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments