முகப்பு
சிவகங்கை

மானாமதுரை - சென்னை பகல்நேர விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

Updated On : 29 ஜூன் 2026, 12:10 am IST
ரயில் இயக்கக் கோரிக்கை... - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூா் வரை தினசரி பகல்நேர விரைவு ரயில் இயக்க வேண்டுமென சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியது.

இது குறித்து சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு சாா்பில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு:

ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூா் வரை வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வரும் ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை இயங்கி வரும் மெமு ரயில் பட்டுக்கோட்டையில் 7 மணி நேரம் நிற்கிறது.

Advertisement

Advertisement

அதை மானாமதுரை ஜங்சன் வரை நீட்டிக்க வேண்டும். மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு புதிதாக பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments