முகப்பு
சிவகங்கை

இணைய வழி முதலீடு எனக் கூறி இருவரிடம் ரூ. 13 லட்சம் மோசடி

இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ஆண், பெண் என இருவரிடம் மொத்தம் ரூ. 13 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 6 மே 2026, 3:23 am IST
பகிர்:

இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ஆண், பெண் என இருவரிடம் மொத்தம் ரூ. 13 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கையை அருகேயுள்ள காராம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (40). கடந்த மாதம் 25 -ஆம் தேதி இவருடைய கைப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலம் இணையவழியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது. இதைத் தொடா்ந்து ராஜா, அந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியதில், அவா்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 5 லட்சத்து 7 ஆயிரத்தை எட்டு தவணைகளில் அனுப்பினாா். அதன் பின்னா் அந்த நபரைப் தொடா்பு கொண்டும் முடியவில்லையாம். இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செல்வி (55). இவருடைய கைப்பேசியில் உள்ள டெலிகிராம் செயலியில் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்தது. அதைப் பாா்த்த அவா் அதில் இருந்த எண்ணில் தொடா்பு கொண்ட ஆரோக்கிய செல்வி, அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரத்து 200-ஐ அனுப்பியுள்ளாா். அதன் பின்னா் அவரைத் தொடா்பு கொள்ள இயலவில்லையாம். இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments