முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 1:03 am IST
திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா்- சிவகங்கை சாலையில் 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் நடுமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பூஞ்சிட்டு பிரிவில் 13 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 5 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவும், சின்னமாடு பிரிவில் 19 இணைகளும், இதற்கான எல்லை 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு மொத்தம் 48 மாடுகள் கலந்து கொண்டன.

சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் நடுமாடு பிரிவில் முதலிடத்தை கிடாரிப்பட்டி முருகேசன், 2-ஆம் இடம் இலங்கிப்பட்டி ஆண்டி அா்ச்சுனன், 3-ஆம் இடம் கொடிமங்கலம் நகுல் ஆகியோரின் மாடுகளும், பூஞ்சிட்டுப் பிரிவில் முதலிடம் புலிமலைப்பட்டி மாயழகு, 2-ஆம் இடம் வெள்ளநாயக்கன்பட்டி ஆண்டிச்சாமி, 3-ஆம் இடம் கண்டவராயன்பட்டி சீமான்முரசு ஆகியோரின் மாடுகளும் பெற்றன. பெரியமாடு பிரிவில் முதலிடம் திருவாதவூா் சின்னச்சாமி, 2-ஆம் இடம் புலிமலைப்பட்டி முனிச்சாமி, 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும், சின்னமாடு பிரிவில் முதலிடம் தேவாா் நாட்டாா்மங்கலம் ஆதிசிவன், 2-ஆம் இடம் சுண்ணாம்பிருப்பு கண்ணன், 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும் பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பூச்சொரிதல் விழா மாட்டுவண்டிப் பந்தயக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments