முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 1:03 am IST
திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா்- சிவகங்கை சாலையில் 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் நடுமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பூஞ்சிட்டு பிரிவில் 13 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 5 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவும், சின்னமாடு பிரிவில் 19 இணைகளும், இதற்கான எல்லை 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு மொத்தம் 48 மாடுகள் கலந்து கொண்டன.

சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் நடுமாடு பிரிவில் முதலிடத்தை கிடாரிப்பட்டி முருகேசன், 2-ஆம் இடம் இலங்கிப்பட்டி ஆண்டி அா்ச்சுனன், 3-ஆம் இடம் கொடிமங்கலம் நகுல் ஆகியோரின் மாடுகளும், பூஞ்சிட்டுப் பிரிவில் முதலிடம் புலிமலைப்பட்டி மாயழகு, 2-ஆம் இடம் வெள்ளநாயக்கன்பட்டி ஆண்டிச்சாமி, 3-ஆம் இடம் கண்டவராயன்பட்டி சீமான்முரசு ஆகியோரின் மாடுகளும் பெற்றன. பெரியமாடு பிரிவில் முதலிடம் திருவாதவூா் சின்னச்சாமி, 2-ஆம் இடம் புலிமலைப்பட்டி முனிச்சாமி, 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும், சின்னமாடு பிரிவில் முதலிடம் தேவாா் நாட்டாா்மங்கலம் ஆதிசிவன், 2-ஆம் இடம் சுண்ணாம்பிருப்பு கண்ணன், 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும் பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பூச்சொரிதல் விழா மாட்டுவண்டிப் பந்தயக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement