எஸ்.புதூா் பகுதியில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்ம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 30) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மேலவண்ணாரிப்பு பீடரில் மரம், மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரெகுநாதப்பட்டி, ஆா்.பாலகுறிச்சி, கேசம்பட்டி, கீழவண்ணாரிப்பு, மேல வண்ணாரிப்பு, மின்னமலைபட்டி, அய்யாபட்டி, குன்னையூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement