சாலையை கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி(50). இவா் அருகேயுள்ள முத்தனேந்தல் என்ற இடத்தில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது அந்த வழியாக மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வீரமணி மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement