விருதுநகரில் இடிந்து விழும் நிலையில் சுகாதார வளாகம்
விருதுநகர் பவுண்டு தெருவில் உள்ள சுகாதார வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் பவுண்டு தெருவில் உள்ள சுகாதார வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சி 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட பவுண்டு தெருவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2002-03-இல் ரூ.4 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த சுகாதார வளாகத்தை காமராஜர் புறவழிச்சாலை, பவுண்டு தெரு, கருப்பசாமி கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது, அந்த
சுகாதார வளாகத்தின் மேற்கூரை பழுதடைந்து, கான்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது. மேலும், ஜன்னல்களும் பழுதடைந்து விட்டன. இதனால், சுகாதார வளாகத்துக்கு பொதுமக்கள் சென்று வர அச்சப்படுகின்றனர்.
எனவே, பழுதடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.