மக்காச் சோள விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி காத்திருப்புப் போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம்
விருதுநகர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற இப்போரட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் அமெரிக்கப் படைப் புழுக்கள் தாக்குதலால் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விதையை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன் பின்னர், நிவாரணத் தொகையை விரைந்து வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.