லாரி மோதிமுதியவா் பலி
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி- சாத்தூா் சாலை சினனகாமன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (65). இவா் தனது மொபெட்டில், சிவகாசி- சாத்தூா் சாலையில் அனுப்பன்குளம் சென்று கொண்டிந்தபோது, மயிலாடும் பாறை பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் ராஜவேலை (42) கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.