முகப்பு
விருதுநகர்

தமிழ்ப்பாடியில் சாலை வளைவில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்ப்பாடியில் ஆபத்தான சாலை வளைவில் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:37 pm IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்ப்பாடியில் ஆபத்தான சாலை வளைவில் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இப்பகுதியில் உள்ள சாலையில் அபாயகரமான வளைவு உள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து தமிழ்ப்பாடி வரும் வாகனங்களை விபத்து அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் இப்பகுதியில் சிவப்பு நிற ஒளிா்விளக்குக் கம்பமோ, எச்சரிக்கைப் பலகையோ இல்லை. இதனால் இப்பகுதியில், அடிக்கடி வாகனவிபத்துக்கள் நடைபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்னா்கூட இச்சாலை வளைவு இருப்பதையறியாமல் வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல விபத்துக்கள் தொடா்ந்து நடைபெற்றுவருவதால் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராமத்தினா் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லையென புகாா் தெரிவித்துள்ளனா். எனவே விரைவில் நடவடிக்கை வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments