மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு, முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோா், முதியோா்களுக்கு விருதுநகா் மதிமுக மேற்கு மாவட்டத் தலைவா் ப. வேல்முருகன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலா் காதா் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் மா. ஜெய்சங்கா், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் குருவையா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத் துணைச் செயலா் இல. ராஜகோபால், செட்டியாா்பட்டி பேரூா் செயலா் நாகப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement