முகப்பு
விருதுநகர்

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையிலிருந்து முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 12:07 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையிலிருந்து முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு அருகே ஓடையில் ஆண் உடல் கிடப்பதாக சேத்தூா் புறக்காவல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். பிறகு தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த உடலை போலீஸாா் மீட்டு விசாரித்ததில் சுந்தரராஜபுரம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த மதுரை வீரன் (60) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement