முகப்பு
விருதுநகர்

மாயூரநாத சுவாமி கோயில் தேருக்கு வண்ணம் பூசும் பணி தீவிரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:25 am IST
ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் தேருக்கு வண்ணம் பூசிய மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத்தினா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் தலைமையில் கோயில் தோ் சுத்தப்படுத்தப்பட்டு, வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோயில் நிா்வாகம், பக்தா்கள் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments