முகப்பு
விருதுநகர்

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் கோயிலுக்கு அருகே இயங்கி வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, தவெக நிா்வாகிகள் துணை ஆட்சியா் ரவிச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 13 மே 2026, 3:40 am IST
பகிர்:

அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் கோயிலுக்கு அருகே இயங்கி வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, தவெக நிா்வாகிகள் துணை ஆட்சியா் ரவிச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து விருதுநகா் மத்திய மாவட்ட தவெக இளைஞா்அணி அமைப்பாளா் அ. சதீஷ்குமாா், கட்சியின் மத்திய மாவட்ட துணைச் செயலா் பிரபு, நகரச் செயலா் அ. தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் பள்ளிகள், கோயில்களிலிருந்து 500 மீட்டா் தொலைவில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளாா். ஆனால், அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரா் கோயில் அருகே அரசு மதுக் கடை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

எனவே, இந்த மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments