தேசிய உழவர்கள் தின விழா
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய உழவர் தின விழா நடைபெற்றது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய உழவர் தின விழா நடைபெற்றது.
விழாவை, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிற்சி உதவியாளர் ஜெ.வனிதா, திட்ட உதவியாளர் தெ.ரேகா, முதுநிலை ஆராய்ச்சியாளர் வீ. விஜிலா உள்ளிட்டோர் பங்கேற்று வேளாண்மை குறித்து தனித்தனித் தலைப்புகளில் பேசினர்.
விழாவில், சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்களான பிஸ்கட் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.