முகப்பு
திருவாரூர்

தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில்

Updated On : 8 அக்டோபர் 2018, 7:54 am IST
பகிர்:

தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், அமைப்பின் திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், சிஐடியு தலைவர்கள் ஜி.பழனிவேல்,  எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.