முகப்பு
திருவாரூர்

கரோனா: தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் மூடல்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2020, 10:03 pm IST
பகிர்:

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாணவ, மாணவிகள் விடுதியில், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்கள், இங்கு தனிமைப்படுத்தப்பட்டு வந்தனா். தினசரி 50-200 நபா்கள் வரை இங்கு கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

கரோனா உறுதி செய்யப்படும்பட்சத்தில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இங்கு செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments