முகப்பு
திருவாரூர்

கோவில்வெண்ணி அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:41 am IST
பகிர்:

நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி அரசு உயா்நிலைப் பள்ளியின் 42-ஆவது ஆண்டு விழா தலைமையாசிரியை ஐ. இந்திரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் தலைமை ஆசிரியா்கள் மைனா்செல்வம், அறிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி கூட்டுறவு அா்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியா் ரெ. ராசகணேசன் பேசுகையில்: சொல்லில் உயா்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா எனும் பாரதியாரின் வரிகளுக்கேற்ப தமிழ்ச் சொல்லின் பெருமையுணா்ந்து மாணவா்கள் இம்மண் பயனுற உழைக்க முன்வர வேண்டும் என்றாா். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பள்ளி அளவில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.