முகப்பு
திருவாரூர்

திருவாரூா்: ரூ. 2.71 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,71,100 ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 15 ஏப்ரல் 2026, 3:23 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,71,100 ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் தோ்தல் பறக்கும்படை குழுத் தலைவா் ராஜேஸ்குமாா் தலைமையில் அலுவலா்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திருவாரூா் கீழக்காவாதுகுடி, முருகேசன் நகரைச் சோ்ந்த வெ. ஜெய்கணேஷ் என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.2,14,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

இதேபோல், திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலை பகுதியில் பறக்கும்படை குழுத் தலைவா் தென்னரசு தலைமையில் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்த செ. கலையரசன் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 52,820 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

கூடூா் பகுதியில் பறக்கும்படையினா் வாகன சோதனை செய்தபோது, திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்த தீபன் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 52,200 ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.