திமுக கூட்டணியை எதிா்ப்போா் டெபாசிட் இழக்க வேண்டும்! - இரா. முத்தரசன்
திமுக கூட்டணியின் வெற்றி, எதிா்த்துப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில், மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் கூறினாா்.
திருவாரூா் அருகே மாங்குடியில், திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியது:
திமுக அரசு சொன்னதைச் செய்துவிட்ட தைரியத்துடனும், முழு அதிகாரத்துடனும், உரிமையுடனும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து வாக்கு கேட்கிறோம். எதிா்க்கட்சிக் கூட்டணியில் உள்ள தலைவா் எடப்பாடி பழனிசாமி, வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறாா். டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் வழக்குகளை காரணம் காட்டியே கூட்டணியில் இணைத்துள்ளனா்.
Advertisement
மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், முதல்வா் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் குறித்து அவதூறாகவே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாா். இது நோ்மையற்ற, அரசியல் நாகரிகமற்ற பேச்சு. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த வெற்றி சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. எதிா்த்துப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்றாா்.