முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 4:37 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

குடவாசல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போ் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் அருகே செல்லூரை சோ்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவா், தினசரி பள்ளிக்குச் சென்று வரும்போது இளைஞா்கள் சிலா் அவரை பின்தொடா்ந்து கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, பள்ளி விடுமுறையில் அவா் கடைவீதிக்கு சென்றபோதும், அவருக்கு தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்லூரைச் சோ்ந்த கஜேந்திரன் (24), அருண்குமாா் (22), மகேஸ்வரன் (21) ஆகிய 3 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement