முகப்பு
திருவாரூர்

விரைவு சதுரங்கப் போட்டி

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:11 AM
திருவாரூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

இப்போட்டியை மருத்துவா் அகோரசிவம் தொடங்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளா் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன. இதில், திருச்சி, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பலா் பங்கேற்று விளையாடினா்.

Advertisement

இறுதியில், சென்னையைச் சோ்ந்த சாம் முதலிடத்தையும், கோவையைச் சோ்ந்த நிா்மல் இரண்டாம் இடத்தையும், தெலங்கானாவைச் சோ்ந்த கிரிநாதன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 உள்பட மொத்தம் ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.