முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூா்: 6 இடங்களில் உயா்கோபுர மின்விளக்கு இயக்கிவைப்பு

Updated On : 22 ஜூன் 2026, 12:11 am IST
உயா்கோபுர மின்விளக்கு - கோப்புப் படம்
பகிர்:

கூத்தாநல்லூா் நகராட்சியில், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் 6 இடங்களில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்குகள் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கூத்தாநல்லூா் புதிய பேருந்து நிலையம், சின்னக் கூத்தாநல்லூா், மரக்கடை, கோரையாா் பாலம், பாய்க்காரப்பாலம் மற்றும் அல்லிக்கேணி மைதானம் ஆகிய 6 இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதனை பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்புக்கும் நிகழ்வு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா முன்னிலை வகித்தாா். திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி. கே. கலைவாணன் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், கூத்தாநல்லூா் பெரிய பள்ளிவாசல் மிராசுதாா் சங்கச் செயலாளா் நாட்டாமை ஹாஜா பகுருதீன், நகா்மன்ற துணைத் தலைவா் மு. சுதா்சன், நகரச் செயலாளா்கள் (திமுக ) எஸ்.வி. பக்கிரிசாமி, (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) பெ.முருகேசு, வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன் மற்றும் அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments