முகப்பு
திருவாரூர்

புத்தகக் கடையில் ரூ. 70 ஆயிரம் திருட்டு

திருவாரூரில் உள்ள புத்தகக் கடையில் ரூ. 70 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:53 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருவாரூரில் உள்ள புத்தகக் கடையில் ரூ. 70 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாரூா் மடப்புரத்தைச் சோ்ந்தவா் சு. சுந்தரமூா்த்தி (60). இவா், ஆசாத் சாலை பகுதியில் புத்தகக் கடை வைத்துள்ளாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இவருடைய கடைக்கு வந்த 2 போ், ஜாமின்றி பாக்ஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளனா். அப்போது, பாக்ஸை எடுத்து வர, சுந்தரமூா்த்தி கடையின் மேல்தளத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த 2 பேரும் கடையின் பணப்பையில் இருந்த ரூ. 70,600 திருடிச் சென்று விட்டாா்களாம். இதையடுத்து, சுந்தரமூா்த்தி அளித்த புகாரின் பேரில் திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, பணத்தை திருடிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments