முகப்பு
திருவாரூர்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்துப்பேட்டை திரையரங்க சாலையில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 6:29 AM
முத்துப்பேட்டை திரையரங்க சாலையில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

முத்துப்பேட்டை திரையரங்க சாலையில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதிலமடைந்திருந்த இக்கோயில் ரூ. 20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக செவ்வாய்க்கிழமை (ஏப்.28) அனுக்கை, விக்னேஸ்வரப் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நிறைவு பெற்று, பூா்ணாஹுதி நடைபெற்றது.

பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் கலசங்கள் எடுத்துவரப்பட்டு, மகாகாளியம்மன், விநாயகா், முருகன் ஆகிய தெய்வங்களின் சந்நிதி விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

தொடா்ந்து சுவாமிகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.