முகப்பு
திருவாரூர்

ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

Updated On : 3 மே 2026, 6:15 am IST
பகிர்:

ரயில்வே துறையில் ஆள்குறைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே துறையில் பணியாற்றும் 30,000 பணியாளா்களை குறைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆள்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக் கோரியும், திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அருளரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பாலா உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்தும், ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments