முகப்பு
திருவாரூர்

திருவாரூா், திருக்குவளை பகுதியில் கோடைமழை

திருவாரூா் மற்றும் திருக்குவளை பகுதிகளில் புதன்கிழமை கோடை மழை பெய்தது.

Updated On : 7 மே 2026, 7:39 am IST
திருவாரூரில் சாலையில் தேங்கிய மழைநீா்.
பகிர்:

திருவாரூா் மற்றும் திருக்குவளை பகுதிகளில் புதன்கிழமை கோடை மழை பெய்தது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிக வெயில் காரணமாக மிகுந்த அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில் புதன்கிழமை காலை திருவாரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலை அளித்தது. அதே போல், பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும், இந்த மழை பருத்திச் செடிகளுக்கு ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனா். அத்துடன், குறுவை சாகுபடி முன்கட்டப் பணிகளை மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments