முகப்பு
திருவாரூர்

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்: தவெகவினர் கொண்டாட்டம்

Updated On : 11 மே 2026, 1:28 am IST
கோட்டூரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட டெல்டா விவசாய மன்றத்தினா், தவெகவினா்.
பகிர்:

தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்கும் வகையில் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சாா்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கோட்டூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அங்கு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. டெல்டா விவசாயிகள் மன்ற தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தவெக ஒன்றியச் செயலாளா் வசந்தகுமாா், கோட்டூா் ஒன்றிய செயற்குழு உறுப்பினா் வசந்தகுமாா், ஊராட்சி செயலாளா் எஸ். அருண்குமாா், கிளைச் செயலாளா் கலையரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: தவெக தலைவா் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில், நீடாமங்கலத்தில்

Advertisement

Advertisement

அக்கட்சியினா் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வெற்றி ஊா்வலம் நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments