முகப்பு
புதுதில்லி

மின் விளக்குகள் திருட்டு: 5 பேர் கைது

: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

Updated On : 13 மே 2013, 12:53 am IST
பகிர்:

: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, போலீஸார் கூறியதாவது:

ரேவாரியில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் சில நாள்களுக்கு முன் திருடு போயின.

Advertisement

Advertisement

அந்த விளக்குகள் தில்லி சரிதா விஹார் பகுதியில் பண்ணைவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின் விளக்குகள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக சோனியா விஹாரைச் சேர்ந்த பவன் கபாரி, பவன், அஸ்லாம், ராகேஷ், சில்லு, ஷாபு என்ற நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்று போலீஸார்

கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.