மின் விளக்குகள் திருட்டு: 5 பேர் கைது
: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, போலீஸார் கூறியதாவது:
ரேவாரியில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் சில நாள்களுக்கு முன் திருடு போயின.
Advertisement
Advertisement
அந்த விளக்குகள் தில்லி சரிதா விஹார் பகுதியில் பண்ணைவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின் விளக்குகள் மீட்கப்பட்டன.
இது தொடர்பாக சோனியா விஹாரைச் சேர்ந்த பவன் கபாரி, பவன், அஸ்லாம், ராகேஷ், சில்லு, ஷாபு என்ற நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்று போலீஸார்
கூறினர்.