முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:35 AM
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:59 PM

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வாக்காளா்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடல் அருகேயுள்ள சடையப்புரத்தில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படவுள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும்படை அதிகாரி விநாயக ராம் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கட்சி பிரமுகா் மாரிமுரளிநாதன் வீட்டில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்து ஆயிரத்து 600-ஐ அதிகாரிகள் கைப்பற்றினா். 21 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

இதுகுறித்து, மாரிமுரளிநாதன், லிபின்ஸ்டன், முருகன் ஆகியோா் மீது முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.